Sunday, 9 November 2014

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா - சினிமா விமர்சனம்



ஹீரோயின் ஒரு டாக்டர். ஹீரோ ஒரு வெட்டாஃபீஸ். அவரோட ஃபிரண்ட் இன்னொரு
வெட்டி ஆஃபீசர். இவங்க  2 பேரும் எப்படி  ஹீரோயினை கரெக்ட்
பண்றாங்க.இதான் கதை.சாரி.ஹீரோ ஹீரோயினை  கரெக்ட் பண்ண  ஹீரோ ஃபிரண்ட்
எப்படி உதவி செய்யறார்?இதான்  கதை.

இதை  இப்படியே சொன்னா  மொக்கைப்படம்னு தமிழன் ஈசியா  சொல்லிடுவான். அவன்
மனசை மாத்தனும்.இதுக்கு என்ன வழி? கூப்பிடுய்யா அந்த  அசிஸ்டெண்ட்
டைரக்டர்சை.எல்லா  பெரிய  டைரக்டர்களும்  சில  புத்திசாலி அசிஸ்டெண்ட்சை
வெச்சிருப்பாங்க. முருகதாஸ்க்கு  ஒரு  கோபி மாதிரி,எஸ் ஏ சந்திரசேகருக்கு
, பவித்ரனுக்கு ஒரு ஷங்கர் மாதிரி ( சூரியன்)



வில்லன்  ஒரு கெமிக்கல் கம்பெனி வெச்சிருக்கார்.அது போக
சம்சாரத்துக்குத்தெரியாம  ஒரு கில்மாசமாச்சாரம் வெச்சிருக்கார்.(கதைக்கு
ரொம்ப  முக்கியம்)அந்த  கம்பெனில  சரியான  விதிமுறைகள்  பின்பற்றப்படலை.
பாதுகாப்பு சாதனங்கள்சரியா  இல்லை.

ஹீரோயினோட தோழி அந்த கம்பெனில  வேலை பார்க்கும்போது கை சிக்கிக்குது (
அதெப்பிடி  ஒரு டாக்டருக்குத்தொழி  சாதா கம்பெனில ஹெல்ப்பரா வேலை
பார்க்கும்?னு  எல்லாம் லாஜிக் பார்க்ககூடாது )


அந்த மெசினொட  விலை கோடிக்கணக்குல.மிசினை  உடைச்சா தோழியகாப்பாத்திடலாம்.
ஆனா  வில்லன்  உடைக்கலை.ஹீரோயின்  உடனே அந்த  கம்பெனிக்கு சீல்
வைக்கச்சொல்லி  கோர்ட்ல  கேஸ் போடறா.


வில்லனின் அடியாட்கள்  துரத்தறாங்க. கேஸ்  என்ன ஆச்சு ? என்பது  மீதிக்கதை.


 கதையைப்படிச்சதும்  தமிழன்  என்ன  யோசிப்பான்னா இது  ஹீரோயின்
ஓரியண்ட்டட் சப்ஜெக்ட் ஆச்சே? இதுல எப்படி  மானம்  ரோஷம்  உள்ள  ஹீரோ
நடிப்பார்?

 அதுக்குத்தான்  கைக்காசு  செலவு  பண்ணி ஒவ்வொரு படத்துக்கும்   ஹீரோவா
நடிக்க  தமிழ் நாட்டில் உள்ள  ஒரே  ஹீரோ நம்ம  விமல்  இருக்க  பயம்  ஏன்?



இவர்  வசனம்  பேசும்  ஸ்டைல் அடடா!! ஓங்கி  1  கொடுக்கலாமா?னு  தோண
வைக்கும்  உச்சரிப்பு. அந்த்க்க்கால   ஒரு  தலை ராகம்  சுதாகர்  மாதிரி.


இவர்  ஃபைட்  எல்லாம்  போடறாரு. நல்லகாமெடி


 சூரி  செம மாடர்ன்  லுக்கில் அசத்தறார்.வழக்கமா   போடும்  மொக்கையை
குறைச்சுட்டார். குட்.பல  சீன்களில் அப்ளாஸ் அள்றார்


நாயகி  ப்ரியா ஆனந்த். விட்டில்  த்ண்ணி  தெளிச்சு  ஃப்ரீயா  விட்டுட்டாங்க  போல

 சுடி போட்டா   துப்பட்டா பத்தி கண்டுக்கவே  இல்லை. வெரிகுட்  ஹீரோயின்.
இந்த   மாதிரி ஏனோ  தானோ ஏஞ்சலைத்தமிழன்  ரொம்பவே  ரசிப்பான்.


நாசர்  வில்லன். சும்மா வந்துட்டுப்போறார்.



தம்பி  ராமையா  கொஞ்ச நேரம்  வர்றார், ஓக்கே ரகம்.

இனியா  , லட்சுமிமேனன் கு  எல்லாம்  டைட்டில்ல நன்றி கார்டு  போடறாங்க.


சபாஷ் இயக்குநர்


1.   பி  சி  செண்ட்டர்  ரசிகர்களைக்கவரும்படி   சுமாரான  நகைச்சுவையை
ஆங்காங்கே  தெளித்து  போர் அடிக்காமல் நகர்த்திய விதம்


2  ஹீரோயினை  டீசண்ட்டாக  டாப் ஆங்கிள் , சைடு ஆங்கிள் , அப்பர் பர்த்
ஆங்கிள் , மிடில் பர்த் ஆங்கிள்களீல்  காட்டியது


3    இமான் -ன் இசையில்  செம  குத்துப்பாட்டு
  ஒண்ணு  ரெடி  பண்ணது


இயக்குநரிடம்  கேள்வி



1.   ஓப்பனிங்  சீன் ல  பேக்டரி  லேபர்   சைக்கிளில்  வரும்போது   ஹார்ட்
அட்டாக் வரும்  சீனில்  தும்மல் வருவது  பொல்  முகத்தை ஏன்
வெச்சுக்கறார்?


2  ஹீரோயின்  ஏன்  பேக்கு மாதிரி எவிடன்ஸ்  ஃபைலோட  வில்லன்  வீட்டுக்கு
போகுது? ஏதோ  நாசர்  வயசான  வில்லனா வர்றக்தால  எதுவும்  செய்யலை. ரேப்
பண்ணி  இருந்தா  என்ன ஆகும் ?


3 படத்துக்கே  முக்கியமான  சீனான  ஃபேக்டரி   மிசினில்    கை அடிபட்டு
ரத்தம்  வரும்  சீனில்  ரத்தம்  சிவப்பா இல்லாம வாடா மல்லிக்கலர்ல
இருக்கு. தியேட்டர்ல  எல்லாரும்  சிரிக்கறாங்க( மன்னிக்க வேண்டுகிறென்
படத்தில் டாக்டர் ராஜ சேகர்  உண்மையான  ரத்தம்  யூஸ் பண்ணி  இருந்தார்
.அது மாதிரி  டெடிக்கேட்டா  ஒர்க் பண்ணலைன்னாலும்
L� Uͅopڣ � �z�வாவது  ஒர்க் பண்ண வேணாமா?


4  கூலி வேலையாளா  மாறுவேசத்தில் (!!) போகும் நாயகி  அந்த
தங்க்ச்சங்கிலியைகழட்டாமல்  போனது ஏனோ?



5  லேபரிடம்  ஐடி கார்டு   போகும்போதும்  வரும்போதும்  கேட்  கீப்பர்
கேட்பாரே? (  புலன்  விசாரணை யில் கேப்டன் இந்த  சினில்  கலக்கி
இருப்பார்)


6  வில்லி  ஃபோன்  பண்ணும்போது   அடியாள்க்குப்பதிலா  போலிஸ் ஆஃபிசர்
எடுக்கார். எதிர்  முனையில்  ஹலோ சத்தம்  கேட்காமலேயே அந்த்   பேக்கு
வில்லி  எல்லாத்திட்டத்தையும்  உளறுது



7  சந்தேகப்பட்டு அடியாளை  போலீஸ்   விசாரிக்கும்போது

அவன்  தான்  ஒரு டாக்டர்ங்கறாஆன். ஐ டி கார்டு காட்டுன்னு கேட்கவே  இல்லையேபோலீஸ்








மனதைக் கவர்ந்த  வசனங்கள்


மழைங்கறது இயற்கை கொடுத்த வரம்.பெய்யும்போதே நனைஞ்சு அனுபவிச்சுக்கனும்.விட்டாஅதுக்கும் டாக்ஸ் போட்டுடுவாங்க # ஒரு ஊர்ல 2 ராஜா (1C2K)


கூட்டம் சேர்ப்பது தான் கஷ்டம்.பிரிக்கறது ரொம்ப ஈசி #1c2k


எங்க ஊர்க்குன்னு தனியா ஒரு ஒயின் ஷாப் ஓப்பன் பண்ணிக்குடுத்துட்டா எங்க ஓட்டு உங்களுக்குத்தான்.

டேய்.அவர் கலெக்டர்டா .இவனுங்களுக்கு கலெகருக்கும் ,கவுன் சிலருக்குமே வித்தியாசம் தெரிய மாட்டேங்குது#c2k


டீ யில் நனைஞ்ச பன்னும் ,தானாக்கிடைச்ச பொண்ணும் ரொம்ப நேரம் நிலைச்சு நிக்காது #1c2k

5   
என் ஆளுக்கும் எனக்கும் 2வயசு வித்தியாசம்.



 பார்த்தா 2தலைமுறை வித்யாசம் மாதிரி தெரியுது?#1C2K


6  
அவ மட்டும் என் கூட வந்திருந்தா லோயர் பெர்த் ல தாலியைக்கட்டி அப்பர் பர்த் ல முதல் இரவை முடிச்சிருப்பேன் -சூரி # 1C2K


7  
டாஸ்மாக்கில் ஹீரோயின் = 1 குவாட்டர்.


 கடைக்காரர் = எல்லாரும் ஒதுங்குங்கப்பா.லேடீஸ் பர்ஸ்ட் #1C2K



சிங்கமுத்து = நாங்க எல்லாம் அன்னப்பறவை மாதிரி.எந்த சரக்குல தண்ணி கலந்து தந்தாலும் அதைப்பிரிச்சு சரக்கை மட்டும் சாப்டற ஆளு


சூரி = என்னது 4 பேரா? என்னடா இவ ஆட்டோ னு நினைச்சா ஷேர் ஆட்டோ வா இருப்பா போல #1C2K


10  
நம்ம ஊர் ல ஏடிஎம் மெசினுக்குக்கூட பாதுகாப்பு இருக்கு.ஆனா மனுசனுக்குப்பாதுகாப்பு இல்லை #1c2k


11 

தம்பிராமையா = எனக்கு FACE ரீடிங் தெரியும்.


சூரி = ஆளைப்பார்த்தா ஈ பி ரீடிங் எடுக்கறவனாட்டம் இருக்கே? #1c2k


12   
சூரி =மிஸ்! எனக்கு ஒரு ஊசி போடனும்.





 உள்ளே ஓ பி டாக்டர் இருக்காரு.அவர் போடுவாரு

. ஓஹோ.நீங்க ஓ பி அடிக்கற டாக்டரா?#1c2k


13  
சாமக்கோடங்கி ஜாமத்துல வேட்டைக்குப்போகும்போது யாரும் குறுக்கால போகக்கூடாது #1C2K





படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்ஸ்


1. 
கவர்ச்சி நாயகன் விமல் க்கு ஓப்பனிங் சீன் ல ஒரு குத்தாட்டம் + மழைல நனையும் சீன்.


2  
ஹீரோயின் ஒரு டாக்டர்.ஹீரோ வெட்டாபீஸ்.எப்டி கரெக்ட் பண்றார் .இதான் ஒன் லைன்.அய்யோ ராமா#1c2k



3



ஹீரோயின் ,ஹீரோயின் தோழி 2 பேருமே எல்லா சீன் லயும் சுடிதார் ல துப்பட்டா வை ஒரு பொருட்டாவே மதிக்கல #1c2k


கார்ப்பரேட் கம்பெனி முதலாளிகளுக்கு மனித உயிரோ மனிதமோ முக்கியம் இல்லை.அவங்க தேவை எல்லாம் டர்ன் ஓவரும் டார்கெட்டும் தான் #1c2k


படம் போட்டு முக்கா மணி நேரம் கழிச்சு உள்ளே வந்தவன் இடை வேளை ல பக் சீட் லேடி கிட்டே கதை கேட்டுட்டு இருக்கான்.#,புதுசா இருக்கே


6  
இந்தப்படத்துல அடிக்கடி ஹீரோ மழையில் நனையற சீன் வருதே.என்னா மேட்டர்?#1c2k


மொக்கைப்படத்தில் சக்க பாட்டு # மழைக்காத்தா நீ சுத்தி அடிக்க .செம குத்தாட்ட சாங் #1c2k





இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்




இயக்குநரிடம்  சில கேள்விகள்





சி  பி  கமெண்ட் = 
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா = ஒரு ஊர்லயும் 2 வாரம் தாண்டாது.மொக்கைப்படம்.விகடன் எதிர்பார்ப்பு மார்க் = 40 ,ரேட்டிங் = 2.5 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 40



குமுதம்  ரேங்க் ( கணிப்பு)-சுமார்



 ரேட்டிங் = 2.5 / 5


விழுப்புரம் கல்யாண் டீலக்ஸ் ஏசி ல படம் பார்த்தேன். ஈரோடு மாதிரி இல்லாம  படம்  முடியும்  வரை ஏசி  ஓடுச்சு. குட்

Friday, 7 November 2014

ஜெய்ஹிந்த் 2 - சினிமா விமர்சனம்

ஹீரோ ஒரு கராத்தே  மாஸ்டர்.இந்த மாதிரி  முதல்லயே  காட்டிட்டா  பின்னால அடியாளுங்களை அடிக்கும்போது  50 பேரை ஒட்டுக்கா அடிச்சாலும்  ஒரு  பய  கேள்வி கேட்க மாட்டான். இவரு  எக்சசைஸ் பண்ணும்போது பிட்டுப்பட  ஹீரோயின்  ஒளிஞ்சிருந்து  ஹீரோவைப்பார்த்து  ரசிப்பது  மாதிரி  ஒளியாம அசால்ட்டா  ஹீரோயின் ரசிக்குது.


ஒரு வாட்டி மாடில  துணி  காய வை க்கும்போது   ஸ்லிப் ஆகி   ஹீரோயின்  கீழே  விழ  இருக்காரு. அப்போ  4 கிமீ தாண்டி வாக்கிங் போய்ட்டிருக்கும்  ஹீரோ  ஓடி வந்து  காப்பாத்த  2 பேருக்கும்  லவ்.


இப்டியே  போனா படம் பப்படம் ஆகிடும். அதனால  ஷங்கர்  , ஏ ஆர் முருக தாஸ்   மாதிரி  ஒரு  சமூக அக்கறை உள்ள  ஆளா  ஹீரோவைக்காட்டனும்.

அதுக்கு  ஒரு  கிளைக்கத,ஒரு  ஏழை  பெற்றோர். அவங்க  குழந்தையை  எல் கே ஜி ல சேர்த்த  பிரபல தனி  யார்  பள்ளில   ட்ரை  பண்றாங்க,டொனேசன் லட்சக்கணக்கில்  கேட்கறாங்க. அதைக்கட்ட  கிட்னியை வித்து  சமாளிக்கறார் அப்பா. ஆனா  முழுசாக்கட்ட  முடியல. போனாப்போகுதுன்னு அரசுப்பள்ளில  சேர்க்க வேண்டியதுதானே? அப்டி செஞ்சா படம் அப்பவே  முடிஞ்சிடுமே. எப்படி 2 மணி  நேரம்  இழுக்கறது?


சீட்  கிடைக்காத  துக்கத் தில் அந்த ஏழைப்பெற்றோர்  குடும்பத்தோட  தற்கொலை  செய்யுது.ஹீரோ   எல்லா  தனியார்  பள்ளிகளும் அரசுடைமை ஆக்கனும், அரசே  டேக் ஓவர்  பண்ணனும்னு மீடியா  மூலம்  போராடறார்,

உடனே  வில்லன்  இதை  முறியடிக்க  ஹீரோ  மேல  பொய்யான  ஒரு கொலைக்கேசில்  மாட்டி  விட்டு  ஜெயிலுக்கு அனுப்பறான். இதோட  இடை வேளை. 


 ஹீரோ  எப்படி  தன்  கொள்கைல  ஜெயிக்கறார்? என்பது  மிச்ச  மீதிக்கதை.


ஹீரோவா ஆக்சன் கிங் அர்ஜுன். இவ்வளவு வயசு ஆகியும்  இன்னும்  தன்  ஜிம் பாடியை மெய்ண்ட்டெயின் பண்ணும் அவரைப்பாராட்டலாம்.டைட்டிலைப்பார்த்ததும் நான்  கூட  பிரதமர்  மோடியை  ஹீரோ அந்நிய சக்தி சதி ல  இருந்து  காப்பாத்தும்  கத-னு நினைச்சேன். ஃபைட்  சீனில் அபளாஸ் வாங்கறார்.இதுகும் மேல  என்ன வேணும்?


ஹீரோயின் சுர்தீன் சாவ்லா. வித்யா பாலன் மாதிரிஅகல   முகம், ஆண்ட்ரியா மாதிரி அகல  முதுகு. அவர்  திரையில் வரும்போது  கண்கள் அவரை  விட்டு அகல  மறுக்குது. இருந்தாலும்  முகம்  கொஞ்சம்  முத்தல்  தான்.


காமெடிக்கு  மயில் சாமி. ஆந்திராவில்  வசூல் அள்ள  பிரம்மானந்தம்  இவர்கள் காமெடி  டிராக் ஆல்ரெடி  வடிவேலு  செஞ்சதுதான். இருந்தாலும்  சிரிக்க  முடியுது. 


ஸ்டண்ட்  மாஸ்டர்  பட்டையைக்கிளப்பறார்.  ஓப்பனிங்  ஃபைட்  , ஜெயில்  ஃபைட்  , க்ளைமாக்ஸ்  ஃபைட்  எல்லாம்  ஓக்கே ரகம் 


இசை  காது  வலிக்குது.  எப்போ பாரு  ஹரி பட சத்தம் மாதிரி  இருப்பது  எரிச்சல் . அந்த  குழந்தை நடிப்பு அருமை . கொள்ளை  கொள்ளும்  முகம், 


சும்மா அனுதாபம் தேட அந்த குழந்தையை சாகடித்திருப்பது தவிர்த்திருக்க   வேண்டியது














மனதைக் கவர்ந்த  வசனங்கள்


1  என்னை மறந்துடு னு நீங்க சொல்லும்போது உங்க கண்ணில் தெரியும் வலியை உணர முடியாதவளா இருப்பேனா நான் ?எப்டி உன்னைக்காதலிச்சிருப்பேன்?-


2  அனைத்துத்தனியார் பள்ளிகளும் அரசுபள்ளி ஆகனும்.அரசே அதை எடுத்து நடத்தனும்.இதுதான் தீர்வு


3  
பில்டிங் FUND 50000 ரூபா. அய்யா.நீங்க கட்ற பில்டிங்க்கு நாங்க எதுக்குங்க டொனேசன் தரனும்?





12 வருசத்துக்கு முன் 15 வயசுப்பொண்ணு க்கு பொரி உருண்டை கொடுத்துக்கரெக்ட் பண்ணுனது நீ தானே? பிரம்மானந்தம் = ஹிஹி யா

5 தப்பை எப்போ உணர்ந்துட்டியோ அப்போவே யார்ட்டயும் மன்னிப்புக்கேட்கத்தேவை இல்லை # JH2

எதுவுமே சாதிக்காம வெறும் மூச்சு மட்டும் விடறது வாழ்க்கை இல்லை


 படம் பார்க்கும்போது போட்ட  ட்வீட்ஸ்


1  
எந்த ஊரா இருந்தாலும் எந்த தியேட்டரா இருந்தாலும் ஷோ டைம்க்கு 10 நிமிஷம் லேட்டா போய் இருட்ல சீட் தேடி் தடவித்தடுமாறுவான் தமிழன்



பிரபல தனியார் பள்ளியில் குழந்தைக்கு LKGசீட் கிடைக்கலைன்னு ஒரு ஏழைக்குடும்பமே தற்கொலை செய்வதெல்லாம் வலிந்து திணிக்கப்பட்ட செயற்கை


LKG ஸ்கூல் FEES கட்ட கிட்னியை வித்து 3000 0 ரூபா ரெடி பன்றதெல்லாம் ஓவர்டோஸ் சென்ட்டிமென்ட்



ஹீரோ எக்சசைஸ் பண்ணும்போது ஹீரோயின் அவரை ஆச்சரியமாப்பாக்குது.அது பாக்கட்டும்னுதான் அண்ணன் ஜிம்க்கே போறாரு


 5
வசூல்வேட்டை நடத்தினாலும் தனியார் பள்ளியில் தன் குழந்தை படித்தால் தான் கவுரவம் என நினைக்கும் மக்களை ப்பற்றிய கதை


6 ஹீரோயின் 15 வது மாடி ல ஸ்லிப் ஆகி ஊசலாடிட்டு இருக்கும்போது ஹீரோ 15*25 = 375 படி ஏறி காப்பாத்திட்டாரு.உடனே லவ்.வாவ்  


 





இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1   கதைக்கு சம்பந்தம்  இல்லைன்னாலும்  முதல் பாக பட ஹிட்  ராசிக்காக  ஜெய் ஹிந்த் 2 என  வைத்தது. டைட்டில்  டிசைன் , மார்க்கெட்டிங்  எல்லாம்  ஓக்கே


2 படம்  மொக்கைப்படம்னு  யாரும்  சொல்லிடக்கூடாதுன்னு சாமார்த்தியமா  சமூக நலக்கருத்தை  கதைக்கருவா  வைத்தது




இயக்குநரிடம்  சில கேள்விகள்

1   முதல்  பாக  ஹிட்  ராசிக்காக டைட்டிலை  அதே  போல்  வைச்சீங்க . ரைட்டு. ஏன் முதல் பாக நாயகி  ரஞ்சிதாவை இதிலும் நாயகி ஆக்கலை ?
செம  பர பரப்பா  இருந்திருக்கும்  . மிஸ்டு


2  இந்த  மாதிரி   ரமணா  டைப்  கதைல   ஹீரோயின்  காதல்   தியாகக்கதை  எப்பிசோடு  எதுக்கு?


3   பின்  பாதியில்  எதுக்கு   கதை  ஸ்கிப் ஆகுது ?  ஹீரோ  சிங்கப்பூர்  எல்லாம் ஏன்  போகறாரு?


4   சாதா ஆள்   சொல்லும்  அந்தக்கருத்து  எப்படி  மக்களிடம்  போய்ச்சேருது? டிவி  மூலம்னு சால்ஜாப்  சொன்னது  எடுபடலை





சி  பி  கமெண்ட் - செயற்கையான  சமூக அக்கறை,வலிந்து  திணிக்கப்பட்ட  அனுதாபம் சம்பாதிக்கும் காட்சிகள் ,முதல் பாகம் அளவு வரவில்லை, ரொம்ப  மோசம்  இல்லை. பாஸ்



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) -40



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) -  சுமார்



 ரேட்டிங் =  2.5 / 5







 Surveen Chawla



a







a




 Charlotte Claire

Thursday, 6 November 2014

Interstellar - சினிமா விமர்சனம்

Interstellar (2014) Poster 

Time is a circle, just like Matthew McConaughey said in True Detective. But it isn't flat. It's spherical.
Interstellar, Christopher Nolan's saline-and-starlight-streaked space-time epic, is so beautiful and ambitious and enveloping that to tick down its imperfections — drippy homilies about how love, especially the paternal kind, can transcend dimensions; an over-investment in its widower McCona-hero's Chuck Yeager/Han Solo-esque expertise on the stick; abuse of a familiar Dylan Thomas quote — ultimately feels small. Released the week after two spaceflight disasters, one of them fatal, the movie is at once a hardscrabble vision of humanity's darkest night (it opens with talking-head clips from Ken Burns' 2012 PBS documentary The Dust Bowl cannily blended with new footage) and a forceful — if not wholly convincing — declaration that we shall outlive our home planet. Human Exceptionalism, you might call its philosophy.
And yet of all the (not that many) kinda-sorta-plausible-ish space exploration flicks to launch since 2001: A Space Odyssey — which predated Neil Armstrong's historic moonwalk by more than a year — Interstellar is the most mercilessly awe-inducing. Even if you gag on its payload of sentiment, as many have and shall, it is the film of 2014 that demands to be experienced on the biggest screen available. Nolan would prefer that you see it in 70mm IMAX if you can; Paramount is making a well-publicized exception to its recent switch to exclusively digital exhibition formats just for him. That's what three wildly successful Bat-movies buy you.
In the scenario cooked up by Nolan's brother Jonathan, with an intellectual kick-start from astrophysicist Kip Thorne, our spendthrift 20th century ways have caught up with us in the unspecified middle or late 21st. Global famine and food wars have drastically thinned our herd. Militaries have disbanded (say what?), and almost everyone — even hotshot former test pilots like our man Cooper, who remembers the Good Old Days even though he's only in his 40s — works the land, which now yields only corn.
NASA is a secret organization led by Michael Caine, Nolan's go-to man for gravitas. In fact, his character is literally a gravity expert, one who has spent decades trying to crack an equation that will enable humanity's migration to Somewhere Else. What's more, his team — Anne Hathaway, David Gyasi and Wes Bentley, plus a sarcastic military-surplus robot voiced and manipulated, at least in some scenes, by the brilliant, elastic-limbed clown Bill Irwin — have identified a dozen potentially habitable planets accessible via wormhole, those express lanes across the cosmos that Thorne has theorized. NASA's best guess is that the wormhole and the planets were put there for us by extraterrestrial intellects vast, cool and weirdly sympathetic. But they need Cooper's Right Stuff to get to Saturn, where the wormhole is. It's unclear who was going to handle the driving if an eventually explained series of mysterious portents hadn't led Cooper and Murph, his 10-year-old budding genius daughter, to their secret lair.
The Earthbound first act feels a lot like the Spielberg picture this was once set to be. (Also like M. Night Shyamalan's thriller Signs, starring America's favorite stoic widower circa 2002, Mel Gibson.) As with every Nolan movie, there's a clockwork narrative logic to it that eventually reveals itself, even if your willing suspension of disbelief has burned up by then.
Anyway, Cooper must leave behind his two kids — Murph and Tom, her less gifted big brother — to try to save the species. Kubrick wouldn't have wasted a tear on an equation as lopsided as that, but Nolan turns on the waterworks (and Hans Zimmer's church-organ score), cutting from the bereft Cooper's drive away from his Norman Rockwell-esque house to the countdown of his rocket. It's the first of many bravura dialogue-free moments that make Interstellar's 169 minutes feel ... well, like less than 169 minutes. (I saw it twice in three days and I was never bored.) Here's another: Their spacecraft, bearing the weary designation Endurance, pinwheels across the rings of Saturn while we hear the thunderstorm-sounds recording Gyasi is playing on his headphones.
I wouldn't have minded a bit if Nolan had lingered on these space vistas more than he does. (Cinematographer Hoyte van Hoytema, of Let the Right One In and Her, has composed frames well worth the extra few bucks to see them in true IMAX.) But he's got a supermassive (and highly spoilable) story to tell, one that keeps him rushing even given the lengthy run time. One thing Kubrick never was was hurried.
Iceland stands in for a pair of beautiful, forbidding planets, but its most stunning environments are computer visualizations born of legit science: Thorne gave the film's army of digital effects artists the equations to visualize both the wormhole and the black hole seen in the film, leading to breakthroughs in "gravitational lensing." Nolan had reserved the right to assert artistic license if the images Thorne's equations produced were too plain or simply too weird for audiences to process, but the objects his data generated — a shiny black soap-bubble in space, and a black hole with a fiery halo of starlight wrapped around it like the string of a yo-yo — are what we see. "This is our observational data," Thorne told Wired magazine. "That's the way nature behaves. Period." (This is not to say others don't take issue with the science on the whole, as astronomer Phil Plait does in Slate.)
Nolan made his name with Memento, a tricksy mystery that moved in two temporal directions at once. In the 14 years since, his movies have swollen to monumental scale, but he still compresses and elongates the fourth dimension more poetically than any other blockbuster-maker. Who better than him to make a film dealing so explicitly with relativity?
Other good sci-fi pictures have addressed the existential, sanity-testing loneliness of sailing across eternity in a can. Interstellar does that, too, but it's probably the first presumptive blockbuster to grapple, even clumsily, with the problem that everyone you loved back on your home world would almost certainly grow to surpass you in age. (It takes two years in cryo-sleep just to get to the wormhole, apart from the time-dilation problem.) Some of the consequences of this make for stirring, emotional stuff, even if the movie isn't as profound as it wants us to believe.
Nolan, a director often accused of coldness, finally got all mushy when he went to outer space. I can't solve that equation, but I've enjoyed trying to scratch it out.


Movie Info

With our time on Earth coming to an end, a team of explorers undertakes the most important mission in human history; traveling beyond this galaxy to discover whether mankind has a future among the stars. (C) Paramount
Rating:
PG-13 (for some intense perilous action and brief strong language)
Genre:
Action & Adventure , Science Fiction & Fantasy
Directed By:
Written By:
Christopher Nolan , Jonathan Nolan
In Theaters:
Runtime:
 நன்றி-http://www.rottentomatoes.com/m/interstellar_2014/



There have been many reviewers and critics alike that have high praise for the film (the visual effects, the acting, the music), but say how it's not Christopher Nolan's best directed film. This is where i personally would have to disagree. Before i get into it, though, i'll talk about Interstellar a bit.

Interstellar is truly a sci-fi epic like no other. To compare said film to '2001: A Space Odyssey' isn't just a disservice, but unnecessary. The films are almost nothing alike, simply sharing small plot elements. Also, Stanley Kubrick's vision of Arthur C. Clarke's sci-fi epic wasn't to ponder the philosophical questions that accompanied the story, but to make art, and art is was, and is. With Interstellar, Mr. Nolan set out to make his most personal and emotional film to date about love and time (time being a recurring theme throughout all of Nolan's films). But it's so much more than that too. There are no words to express the epic journey Nolan takes us on in the film, but needless to say, it's tear-jerking and emotional throughout. The acting is top-notch, especially McConaughey, who gives (I would say) his most emotional performance yet. But the actor who stole the show in a few scenes (one in particular, when they're on an alien planet) was David Gyasi as Romilly, one of the astronauts aboard the Endurance, their spacecraft. The musical score from Hans Zimmer is, without a doubt, his best and most influential work to date, helping drive the film's bold and breath-taking vision (the church organ helped significantly). The visual effects are easily the best to date as well, and of the year. To see a black hole created through visual effects in such a way, with pages theoretical equations provided by Kip Thorne (theoretical physicist, of whom's work inspired the film's genesis); what you see in the film is the most realistic depiction of a black hole, and even offered new insight to accretion discs surrounding the anomalies. But even everything else, from the alien planets to the Endurance, the visuals always look real. Then, there's the writing. I would definitely have to say this has some of the best dialogue i've ever heard in a sci-fi movie, and the script continually pours or oozes emotion, keeping the audience tethered to the film.

Now, about Mr. Nolan. Don't just look at Nolan, but look at his films. Some say Inception would be his masterpiece, while others would say it's The Dark Knight, or Memento. But honestly, every single film Christopher Nolan has directed is a masterpiece not of its genre, but of Nolan. Following is his quiet masterpiece, not the film that put Mr. Nolan on the map as a phenomenal director, but one people visited or revisited after becoming accustomed to Nolan, after seeing Memento, what could be called his breakout masterpiece. Then, right after, he directed the remake of the Norwegian thriller, Insomnia. This, too, could be considered a masterpiece, even if a remake. Then, we were given his take on the Batman universe, starting with Batman Begins, the origin masterpiece. Then, there's The Prestige, adapted from the novel of the same name, which can be called his dark masterpiece. The Dark Knight, his bold masterpiece; Inception, his complex masterpiece, and The Dark Knight Rises, his flawed masterpiece. Now, we have Interstellar, his emotional or personal masterpiece.

This is just my looking at Nolan and his films, but whatever your thoughts are, you can't deny Interstellar is one hell of a journey. He certainly is one of the best filmmakers of our time, and of all time. I can't wait to see what he does next, but i'm not sure it will be as emotionally powerful as Interstellar.

நன்றி-http://www.imdb.com/title/tt0816692/ 

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (7 11 2014 ) 4 படங்கள் முன்னோட்ட பார்வை






 1 ஜெய்ஹிந்த் -2 -ஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக அர்ஜுன் எழுதி ,இயக்கி, தயாரித்து நடிக்கும் படம் அர்ஜுனின் ஜெய்ஹிந்த் -2. இந்தப் படத்தின் கதாநாயகியாக சுர்வீன் சாவ்லா நடிக்கிறார்.
புதுமுகமாக சிம்ரன் கபூர் என்ற முன்பை நடிகை ஒருவரும் அறிமுகமாகிறார். மற்றும் ராகுல்தேவ் , பிரம்மானந்தம், ரவிகாளே, அதுல் மாதூர், மயில்சாமி ,மனோபாலா, வினய்பிரசாத், நரசிம்ம ராஜு, கெளதம் சுந்தர்ராஜன், பரத்குமார், அமீத்திவாரி, பேபி யுனிதா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
படம் பற்றி அர்ஜுன் கூறியதாவது…..
இன்றைய கல்வி முறையை நாட்டுப்பற்று மற்றும் ஆக்ஷன் கலந்து அதிரடி படமாக உருவாக்கி இருக்கிறோம். கல்வி இப்படி இருந்தால் ஏழைகளுக்கும் தரமான கல்வி கிடைக்கும் என்ற பொதுவான ஒருவனின் கருத்தை இதில் சொல்கிறோம்.
ஒவ்வொரு பெற்றோரின் ஆசை, தங்களது வாரிசுகள் நல்ல கல்வியை பெற வேண்டும் என்பதே. அந்த கனவு எங்கே? எப்படியெல்லாம் சிதைக்கப்படுகிறது என்பதை இதில் பிரதிபலிக்கிறோம்.
சமீபத்தில் இந்த படத்திற்காக சென்னை மற்றும்  பெங்களூரில் ஒரு பாடல் காட்சி படமாகப்பட்டது.
“ அய்யா படிச்சவரே
அஞ்செழுத்து அர்ஜுனரே
கல்விக்கண் தொறக்கவந்த
காமராசு வகையறாவே”
 
 
 2  ஒரு ஊர்ல ரெண்டு ராஜா
 
விமல், ப்ரியா ஆனந்த், சூரி, விசாகா சிங் காம்பினேஷனில் உருவாகியுள்ள படம் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’.
'ஜெயம் கொண்டான்', ‘கண்டேன் காதலை’,'வந்தான் வென்றான்',  ‘சேட்டை’ படங்களை இயக்கிய கண்ணன் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். இமான் இசையமைத்திருக்கிறார். மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்போடெயின்மெண்ட் நிறுவனம் இதனைத் தயாரித்திருக்கிறது. கிராமத்து பின்னணியில் காதலுடன் நகைச்சுவை கலந்து படம் எடுக்கப்பட்டிருக்கிறதாம்.
இப்படம் அக்டோபர் 2 தேதி காந்தி ஜெயந்தியன்று ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் லேட்டஸ்ட் தகவலின் படி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி படத்தை அக்டோபர் 10-ஆம் தேதி அல்லது அக்டோபர் 22-ஆம் தேதி தீபாவளியன்று ரிலீஸ் செய்யும் திட்டமிட்டத்தில் இருக்கிறார்களாம்.
காரணம் கடந்த வெள்ளியன்று வெளியான ‘மெட்ராஸ்’, ‘ஜீவா’ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாலும் அதோடு அக்டோபர் 2-ஆம் தேதி ‘யான்’ படம் வெளியாகவிருப்பதாலும் தான் இந்த மாற்றமாம். ஏற்கெனவே தீபாவளி போட்டியில் ஐ, கத்தி, பூஜை என மூன்று பெரிய படங்கள் உள்ளன. ஆக, இந்தப் போட்டியில் இப்போது ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படமும் இணைந்தாலும் ஆச்சர்யப்படுவததிற்கில்லை.


 3

Interstellar'


 
வசூல்களின் அரசன் என அழைக்கப்படும் ‘பேட் மேன்’ படங்களின் உருவாக்கமும் சரி, திரைக்கதை அமைப்பும் சரி உலகின் அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் அதிகம் வரவேற்படைந்தவை. அதற்கு முக்கியக் காரணம் அப்படங்களின் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன்.
'பேட் மேன்’ பாகங்கள் மட்டுமல்லாமல் வசூலை வாரிக் குவித்த ‘ மேன் ஆஃப் ஸ்டீல்’, ’இன்செப்ஷன்’, ‘இன்ஸ்டெல்லர்’ போன்ற படங்களும் இவரது படைப்பே.
மும்பை ஐ.ஐ.டி வரும் டிசம்பர் 28ம் தேதி ‘மூட் இண்டிகோ’ என்னும் பெயரில் திரைப்பட விழாவை நடத்த உள்ளனர். சினிமா கலையை கற்று வரும் பல மாணவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

பல வருடங்களாக வெவ்வேறு தீம்களில் விழா நடத்தும் மும்பை ஐ.ஐ.டி  இந்த வருடம் கிறிஸ்டோபர் நோலன் படங்களை தீமாகக் கொண்டு நடக்க உள்ளது.
இந்த விழாவில் கிறிஸ்டோபர் இயக்கிய குறும்படங்களும் திரையிடப்பட உள்ளன. மேலும் மாணவர்கள் கேட்கும் சினிமா குறித்த பல கேள்விகளுக்குப் பதிலளிக்க உள்ளார் கிறிஸ்டோபர் .

4
ஜி.எஸ். டெவல்லபர் பட நிறுவனம் சார்பில் பி.குணசேகரன் தயாரிக்கும் படம் பண்டுவம். இதில் நாயகனாக சித்தேஷ் நடிக்கிறார். இவர் ஏற்கனவே பல படங்களில் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சுவாசிகா நடிக்கிறார். இவர் மைதானம், சாட்டை படங்களில் நடித்தவர். ஆண்டனி, கார்த்திக், பகதூர் ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி கீட்டன் இயக்குகிறார். இவர் நடிகர் வாகை சந்திரசேகரின் அண்ணன் பாண்டியனின் மகன் ஆவார். ராம. நாராயணனிடம் உதவியாளராகவும் பணியாற்றியவர். படத்தில் முக்கிய கேரக்டரிலும் இவர் நடிக்கிறார். படம் பற்றி அவர் சொல்கிறார்.

மருத்துவம் சம்பந்தப்பட்ட பின்னணியை கொண்ட படமாக உருவாகிறது. கல்லூரி மாணவர்களின் காதல் மற்றும் அவர்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் படமாகவும் இருக்கும். பண்டுவம் என்றால் சுத்த தமிழில் ரணசிகிச்சை என்று பெயர். பண்டைய காலத்தில் ரணசிகிச்சையை பண்டுவம் என்று அழைப்பர்.

ஒளிப்பதிவு: முத்ரா, இசை: நீரோ, பாடல்: பத்மாவதி, எடிட்டிங்: யோகாபாஸ்கர், ஸ்டண்ட்: விஜய், நடனம்: ராதிகா.
 thanx - dinamani

Wednesday, 5 November 2014

12 ராசிகளுக்குமான சனிப் பெயர்ச்சி பலன்கள் 2.11.2014 முதல் 25.10.2017 வரை


 மேஷம்

அதிகாரத்திற்குத் தலை வணங்காதவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம்
வீட்டில் அமர்ந்து அடுக்கடுக்காகப் பல சங்கடங் களைத் தந்த சனி பகவான்
2.11.2014 முதல் 25.10.2017 வரை உள்ள காலகட்டங்களில் 8-ம் வீட்டில்
அட்டமத்துச் சனியாக இருந்து செயல்படப் போகிறார். எனவே நீங்கள் எதிலும்
கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உங்கள் குடும்ப விஷயங்களில்
மற்றவர்களை அனுமதிக்காதீர்கள்.

வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்துப் பேசி சிக்கிக்கொள்ள வேண்டாமே.
கணவன்-மனைவிக்குள் வரும் சின்னச் சின்ன விவாதங்களையெல்லாம் பேசித்
தீர்க்கப்பாருங்கள். உங்கள் குடும்ப விஷயங்களில் மற்றவர்களைத் தலையிட
அனுமதிக்காதீர்கள். எதிர்மறை எண்ணங்களால் மனஇறுக்கம் உண்டாகும்.
பயணங்களின் போது கவனம் தேவை. சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். முறையான
பட்டா இல்லாத இடத்தை வாங்க வேண்டாம்.

மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். பிள்ளைகளிடம்
கோபத்தைக் காட்ட வேண்டாம். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். புது வேலை
அமையும். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும்.
உறவினர், நண்பர்களில் சிலர் உங்களை மதிக்காமல் போவார்கள். வழக்கில்
தீர்ப்பு தாமதமாகும். இரத்த அழுத்தம் அதிகரிக்கும். நெஞ்சு வலி,
தலைசுற்றல் வந்துபோகும்.

முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள். கொழுப்புச் சத்து
மற்றும் கார உணவுகளைக் குறைப்பது நல்லது. சனி பகவான் ராசிக்கு 2-ம்
வீட்டைப் பார்ப்பதால் தந்திரமாகப் பேசிக் காரியம் சாதிப்பீர்கள். ஆனால்
சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசிச் சிக்கிக்கொள்ளாதீர்கள்.
செலவினங்கள் அதிகமாகும். சனி பகவான் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் யாரும்
உங்களை சரியாகப் புரிந்துக்கொள்ளவில்லையே என அவ்வப்போது உங்களுக்குள்ளே
ஆதங்கப்பட்டுக்கொள்வீர்கள்.

பூர்வீக சொத்துப் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கும். கர்ப்பிணிப் பெண்கள்
மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்ததையும் உட்கொள்ள வேண்டாம். சனி
பகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் திடீர் பயணங்கள், செலவுகள், வீண்
அலைச்சல், டென்ஷன் வந்துப் போகும். பிறமொழிக்காரர்களால் திடீர் திருப்பம்
உண்டாகும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் ஆழம்
தெரியாமல் காலை விடாதீர்கள். உங்கள் பெயரில் புது முதலீடுகளைத்
தவிர்க்கவும்.

வேலையாள், பங்குதாரர்கள் முரண்டுபிடிப்பார்கள். உணவு, கமிஷன், ரியல்
எஸ்டேட் வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்தியோகத்தில் கால நேரம் பார்க்காமல்
உழைக்க வேண்டிவரும். உங்கள் உழைப்பிற்கு வேறு சிலர் உரிமை
கொண்டாடுவார்கள். சிலர் உங்கள் மீது பொய் வழக்குப் போடுவார்கள். புது
வாய்ப்புகளும், எதிர்பார்த்த சலுகைகளும் சற்றுத் தாமதமாகி கிடைக்கும்.

இந்த சனி மாற்றம் சின்னச் சின்ன இழப்புகளையும், ஏமாற்றங்களையும்
தந்தாலும் அனுபவ அறிவால் முன்னேற்றம் தருவதாக அமையும்.

ரிஷபம்

எவ்வளவு பேரம் பேசினாலும் கொள்கை குறிக்கோளை விட்டு விலகாதவர்களே! இதுவரை
உங்கள் ராசிக்கு 6-வது வீட்டில் அமர்ந்து சகல யோகங்களையும் தந்த சனி
பகவான் 2.11.2014 முதல் 25.10.2017 வரை உள்ள காலகட்டங்களில் 7-வது
வீட்டில் அமர்ந்து கண்டகச் சனியாக வருகிறாரே என்று அச்சப்படாதீர்கள். சனி
பகவான் உங்களுக்கு யோகாதிபதியாக வருவதால் உங்களுக்கு ஓரளவு நிம்மதியையே
தருவார்.

என்றாலும் இனி இடம், பொருள், ஏவலறிந்து செயல்படப்பாருங்கள். என்றாலும்
களத்திர ஸ்தானமான 7-ம் வீட்டில் சனி அமர்வதால் திருமணம் தாமதமாகி
முடியும். ஈகோ பிரச்சினை, வீண் சந்தேகத்தால் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள்
ஏற்படக்கூடும். இருவரும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மனைவிக்கு
கர்ப்பச் சிதைவு, மாதவிடாய்க் கோளாறு, மூட்டு வலி வந்து போகும்.

யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். பலர் வேலையாகும்
வரை உங்களைப் பயன்படுத்திக்கொண்டு கருவேப்பில்லையாக வீசி விட்டார்கள்
என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள்.
வழக்கை நினைத்து தூக்கம் குறையும். அரசு விவகாரங்களில் அலட்சியம்
வேண்டாம். உறவினர், நண்பர்கள் மத்தியில் உங்களைப் பற்றிய விமர்சனங்கள்
அதிகமாகும்.

உத்யோகம், வியாபாரத்தின் பொருட்டுக் குடும்பத்தைப் பிரிய வேண்டிவரும்.
அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப்பாருங்கள். சின்னச் சின்ன மரியாதைக்
குறைவான சம்பவங்களும், ஏமாற்றங்களும் வந்து போகும். என்றாலும்
வெளிவட்டாரம் சிறப்பாக இருக்கும். ஒரு சொத்தை விற்று பழைய
பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள்.
குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை
பைசல் செய்வீர்கள்.

புதிதாக வாகனம் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். குழந்தை
பாக்கியம் கிடைக்கும். சனி பகவான் ராசியைப் பார்ப்பதால் அலர்ஜி, யூரினரி
இன்பெக் ஷன், சளித் தொந்தரவு வந்து போகும். வெளி உணவுகளைத்
தவிர்க்கப்பாருங்கள். சனி பகவான் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் வீடு, வாகனப்
பராமரிப்புச் செலவுகள், தாயாருடன் மோதல்கள், அவருக்கு மருத்துவச்
செலவுகளும், உங்களுக்கு வீண் பழியும் வந்து போகும்.

சனி பகவான் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் வீண் செலவுகள், தந்தையாருடன்
மனத்தாங்கல், அவருக்குத் தலை வலி, கை, கால் அசதி வரக்கூடும்.
வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக
இருக்கும். பங்குதாரர்களுடன் பனிப்போர் வெடிக்கும். சக ஊழியர்களால்
பிரச்சினைகள் வந்தாலும் அதிகாரிகள் ஆதரிப்பார்கள்.

இந்த சனி மாற்றம் வேலைச் சுமையைத் தந்தாலும் உங்களைப் போராடி முன்னேற வைக்கும்.

மிதுனம்


நெருக்கடி நேரத்திலும் நிறம் மாறாதவர்களே! இதுவரை உங்களின் புத்தி
ஸ்தானமான 5-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை எதையும் முழுமையாகச்
சிந்தக்கவிடாமல் தடுத்த சனி பகவான் 2.11.2014 முதல் 25.10.2017 வரை உள்ள
காலகட்டங்களில் 6-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் வாழ்க்கையில் அதிரடி
மாற்றங்களையும், யோகங்களையும் அள்ளித் தர உள்ளார். குடும்பத்தில்
சந்தோஷம் குடிகொள்ளும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

தன்னிச்சையாகச் சில முடிவுகளெல்லாம் எடுக்கத் தொடங்குவீர்கள்.
பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். அழகு, ஆரோக்கியம் கூடும்.
இனி ஆழ்ந்த உறக்கம் வரும். பூர்வ புண்ய ஸ்தானமான 5-ம் வீட்டை விட்டு சனி
விலகுவதால் குழந்தை பாக்கியம் தடையின்றிக் கிடைக்கும். பூர்வீகச் சொத்து
கைக்கு வரும். பிள்ளைகளின் தனித்திறமைகளை இனங்கண்டறிந்து வளர்ப்பீர்கள்.
வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின்
அலட்சியப் போக்கு மாறும்.

பழைய கடன் பிரச்சினையைத் தீர்க்க வழி வகை செய்வீர்கள். உறவினர்,
நண்பர்களுடன் இருந்துவந்த மோதல் போக்கு மாறும். அவர்கள் வீட்டுத்
திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசத்தை முன்னின்று நடத்துவீர்கள்.
எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். ஷேர் மூலமாகவும் பணம் வரும்.
கோவில் விசேஷங்களுக்குத் தலைமை தாங்குவீர்கள். என்றாலும் அவ்வப்போது
சுபச் செலவுகளும், புகழ் பெற்ற புண்ணிய ஸ்தல பயணங்களும் அதிகரிக்கும்.
சனி பகவான் மூன்றாம் வீட்டைப் பார்ப்பதால் மனோபலம் கூடும்.

சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். இளைய
சகோதர வகையில் உதவிகள் உண்டு. புதிய பதவி, பொறுப்புகளுக்குத்
தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சனி பகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால்
சிறுசிறு விபத்துகள், மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். முக்கிய
கோப்புகளை கையெழுத்திடும் முன்பாகச் சட்ட நிபுணர்களை கலந்தலோசிப்பது
நல்லது. சனி பகவான் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் சுபச் செலவுகள்
அதிகமாகும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி பெறுவீர்கள். நீண்ட நாட்களாக செல்ல
வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச்
சென்று வருவீர்கள். வேற்று மதத்தவர்கள், மொழியினரால் திடீர் திருப்பம்
உண்டாகும்.

வியாபாரம் செழிக்கும். புகழ் பெற்ற பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம்
செய்துக்கொள்ளும் வாய்ப்பு வரும். சிலர் புது கிளைகள் தொடங்குவீர்கள்.
எரிபொருள், செங்கல் சூளை வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களைக்
குறைக் கூறிய அதிகாரியின் மனசு மாறும். உங்களின் உழைப்பிற்கு பாராட்டுக்
கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். சக
ஊழியர்கள் மதிப்பார்கள்.

இந்த சனிப் பெயர்ச்சி தொட்ட காரியங்களையெல்லாம் துலங்க வைப்பதுடன்,
அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்வதாக அமையும்.

கடகம்


கற்பனைத் திறமும் கலாரசனையும் உள்ளவர்களே! உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில்
அமர்ந்து அடுக்கடுக்கான வேலைகளால் மனஇறுக்கத்தையும், வீண் அலைச்சலையும்
தந்து உங்களை நாலாவிதத்திலும் சிக்க வைத்த சனி பகவான் இப்போது 2.11.2014
முதல் 25.10.2017வரை உள்ள காலகட்டங்களில் 5-ம் வீட்டில் அமர்வதால் ஒரளவு
நன்மையே உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. வாடகை வீட்டிலிருந்த
சிலர் சொந்த வீட்டிற்குக் குடிப்புகுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச்
செலவுகளும் குறையும்.

தாயாரின் ஆரோக்கியம் சீராகும். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன்
இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அரைக்குறையாக நின்ற கட்டிட
வேலைகளைத் தொடங்குவீர்கள். லோன் கிடைக்கும். நேர்மறை எண்ணங்கள்
பிறக்கும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும்.
வாகனப் பழுதைச் சரி செய்வீர்கள்.

சனி பகவான் பூர்வ புண்ய ஸ்தானமான 5-ம் வீட்டில் அமர்வதால் குழந்தை
பாக்கியம் கிடைக்கும். என்றாலும் பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப்
பிடிப்பது நல்லது. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். அவர்கள்
விரும்பும் பாடத்தில் உயர்கல்வி பெற அனுமதியுங்கள். மகளுக்கு வரன்
பார்க்கும் போது விசாரித்து முடிவெடுப்பது நல்லது. உயர்கல்வி,
உத்தியோகத்தின் பொருட்டு மகனை விட்டுப் பிரிய வேண்டிய சூழ்நிலை
உருவாகும். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களைத்
தவிர்க்கப்பாருங்கள்.

பூர்வீக சொத்துப் பிரச்சினை தலைத்தூக்கும். உறவினர்கள் விஷயத்தில்
நியாயம் பேசப் போய் பெயரைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். குடும்பத்தினருடன்
சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறை வேற்றுவீர்கள். சனி பகவான்
இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் மற்றவர்களை விமர்சித்துப் பேச வேண்டாம்.
கண் வலி, பார்வைக் கோளாறு, பல் வலி வந்து நீங்கும். யாருக்காகவும்
உறுதிமொழி தர வேண்டாம்.

சனி பகவான் 7-ம் வீட்டை பார்ப்பதால் கணவன் - மனைவிக்குள் அனுசரித்துப்
போவது நல்லது. மனைவியின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம்
செலுத்தப்பாருங்கள். அடிவயிற்றில் வலி, கணுக்கால் வலி வந்து போகும். சனி
பகவான் லாப வீட்டைப் பார்ப்பதால் செல்வம், செல்வாக்குக் கூடும். புது
வேலை அமையும். மூத்த சகோதரங்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில்
புதிய சலுகைத் திட்டங்களை அறிவித்து லாபம் ஈட்டுவீர்கள்.
வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக்கொள்வீர்கள். முக்கியப்
பிரமுகர்களின் அறிமுகத்தால் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

இரும்பு, ரசாயனம், ஸ்பெகுலேஷன் வகைகள் மூலம் லாபம் அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். சக
ஊழியர்களுடன் இருந்து வந்த ஈகோ பிரச்சினை மறையும். பதவி உயர்விற்காகத்
தேர்வெழுதிக் காத்திருந் தவர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் தேடி வரும்.

இந்த சனிப் பெயர்ச்சி உங்களை உற்சாகப்படுத்துவதுடன், புதிய திட்டங்களை
நிறைவேற்றும் வல்லமையையும் தரக்கூடியதாக அமையும்.


சிம்மம்


விவாதம் என வந்துவிட்டால் விடாப்பிடியாய் இருப்பவர்களே! இதுவரை ராசிக்கு
3-ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும்
தந்த சனி பகவான் இப்போது 2.11.2014 முதல் 25.10.2017 வரை உள்ள
காலகட்டங்களில் 4-ம் வீட்டில் அமர்வதால் இக்காலக்கட்டம் உங்களை கொஞ்சம்
போராடி தான் எதையும் சாதிக்க வைக்கும். உங்கள் ராசிக்கு ஆறு மற்றும்
ஏழாம் வீட்டதிபதியாக சனி வருவதால் உங்கள் மனைவிக்கு அடிக்கடி உடல் நிலை
பாதிக்கும்.

சிலர் பூர்வீகத்தை விட்டு வேறு ஊர் அல்லது அண்டை மாநிலத்தில்
குடிபுகுவீர்கள். அர்த்தாஷ்டமச் சனியாக அமர்வதால் உங்களுடைய பலம் எது,
பலவீனம் எது என்பதை நீங்கள் உணர்ந்து செயல்படப்பாருங்கள். எதிலும்
மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டாம். சிக்கனமாக இருக்கவேண்டுமென்று
நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் இருந்துகொண்டேயிருக்கும். சொத்து
வாங்கும் போது தாய்பத்திரத்தைச் சரி பார்த்து வாங்குவது நல்லது.
அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். சிறுசிறு வாகன
விபத்துகள் நிகழக்கூடும். மின்சாரம், கத்திரிக்கோல் போன்றவற்றைக்
கவனமாகக் கையாளுங்கள்.

கணவன்- மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அரசின் அனுமதி
பெறாமல் கூடுதல் தளங்கள் அமைத்து வீடு கட்ட வேண்டாம். வழக்கில் அலட்சியம்
வேண்டாம். நேரம் கடந்து சாப்பிடுவதைத் தவிர்க்கப்பாருங்கள். அல்சர்
வரக்கூடும். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிச் செய்ய வேண்டாம்.
அவ்வப்போது சோர்வு, களைப்புடன் காணப்படுவீர்கள். சுத்திகரிக்கப்படாத
தண்ணீரைக் குடிக்க வேண்டாம்.

சனி பகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் வராது என்றிருந்த பணம் கைக்கு
வரும். மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன்
இணக்கமான சூழல் உருவாகும். சனி பகவான் 10-ம் வீட்டைப் பார்ப்பதால்
உத்தியோகத்தில் வேலைபளு, விரும்பத்தகாத இடமாற்றங்கள், வீண் பழிகள் வந்து
செல்லும். வியாபாரத்தில் போட்டிகளால் லாபம் குறையும். விளம்பர
யுக்திகளைக் கையாளுங்கள். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் நயமாகப்
பேசுங்கள்.

பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. வேற்று மதத்தினர், நாட்டினர்
மூலம் ஆதாயமடைவீர்கள். பழைய பங்குதாரரை மாற்றுவீர்கள். ரியல் எஸ்டேட்,
ஸ்டேஷனரி, துரித உணவகம் வகைகளால் லாபமடை வீர்கள். உத்தியோகத்தில்
சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். அதிகாரிகள் குறைகூறினாலும்
அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். சக ஊழியர்களால் மறைமுகப் பிரச்சினைகள்
வந்து போகும். திடீர் இடமாற்றங்கள் வந்துப் போகும். மறுக்கப்பட்ட
உரிமைகள் கிடைக்கும்.

இந்த சனி மாற்றம் இடமாற்றங்களைத் தந்தாலும் தொடர் முயற்சியால் சாதிக்க
வைப்பதாக அமையும்.

கன்னி


தளராத தன்னம்பிக்கையாளர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் பாதச்
சனியாக அமர்ந்து உங்களைப் பல வகையிலும் சனி பகவான் சின்னா
பின்னமாக்கினரே! பணத்தட்டுப் பாட்டையும், பேச்சால் பிரச்சினைகளிலும்
சிக்கவைத்து உங்களைக் கேளிக்கையாக்கிய சனி பகவான் இப்போது 2.11.2014
முதல் 25.10.2017 வரை உள்ள காலகட்டங்களில் 3-ம் வீட்டில் வலுவாக
அமர்வதால் பணவரவு அதிகரிக்கும்.

வீண் சந்தேகம், ஈகோ பிரச்சினையால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று
சேருவீர்கள். தோல்வி முகம் மாறும். மாதக் கணக்கில் தள்ளிப் போன
காரியங்களெல்லாம் இனி விரைந்து முடியும். தைரியம் பிறக்கும். மாறுபட்ட
அணுகுமுறையால் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். இதமாகவும்,
இங்கிதமாகவும் பேசத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு
மதிப்புக் கூடும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். குழந்தை பாக்கியமும்
கிடைக்கும். நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்று புது வேலையில்
அமர்வீர்கள். மருந்து, மாத்திரையிலிருந்து விடுபடுவீர்கள். உடல் நலம்
சீராகும். மகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் வந்தமையும். பூர்வீக
சொத்து பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். சிலர் புதிதாக வீடு, மனை
வாங்குவீர்கள்.

பிள்ளைகள் ஆக்கபூர்வமாகச் செயல்படுவார்கள். உங்களைத் தவறாகப் புரிந்து
கொண்டு விலகிச் சென்ற பழைய உறவினர், நண்பர்கள் வலிய வந்து உறவாடுவார்கள்.
சனி பகவான் ஐந்தாம் வீட்டைப் பார்ப்பதால் பூர்வீக சொத்துப் பராமரிப்புச்
செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து
போகும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும்
உட்கொள்ள வேண்டாம்.

சனி பகவான் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் அநாவசியச் செலவுகளைத்
தவிர்க்கப்பாருங்கள். தந்தையாருடன் கசப்புணர்வுகள், அவருக்கு வீண்
டென்ஷன், நெஞ்சு எரிச்சல், மூச்சுத் திணறல் வந்து போகும். சனி பகவான்
12-ம் வீட்டைப் பார்ப்பதால் திடீர் பயணங்கள், வீண் அலைச்சல், தூக்கமின்மை
வந்து போகும். மகான்கள், சித்தர்களின் தொடர்பு கிடைக்கும். வியாபாரத்தில்
போட்டிகள் குறையும். பாக்கிகள் வசூலாகும்.

பழைய வேலையாள், வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். ஏற்றுமதி-இறக்குமதி,
கட்டுமானப் பொருட்கள், வாகன வகைகயால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில்
ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு முன்னுரிமை கிடைக்கும்.
உயரதிகாரிகள், சக ஊழியர்கள் உங்களைப் புரிந்து கொண்டு வலிய வந்து
உதவுவார்கள்.

இந்த சனி மாற்றம் புதுத் தெம்பையும், தைரியத்தையும் தருவதுடன், எதிலும்
முதலிடத்தையும் பிடிக்க வைப்பதாக அமையும்.

துலாம்


தோல்வியைக் கண்டு துவளாதவர்களே! இதுவரை உங்கள் ராசிக்குள் அமர்ந்து ஜென்ம
சனியாக இருந்து உங்களை விரக்தியின் விளிம்பிற்கே அழைத்துச் சென்றார் சனி
பகவான். ஏதோ ஒன்று உங்களை அழுத்துவது போல நினைத்தீர்களே! இனி உடம்பு
லேசாகும். ஒரு பிரச்சினை தீர்வதற்குள் மற்றொரு பிரச்சினையைத் தந்து
உங்களை சோகத்தில் மூழ்க வைத்தாரோ! இப்படி உங்களை வாட்டி வதைத்த சனி
பகவான் இப்பொழுது 2.11.2014 முதல் 25.10.2017 வரை உள்ள காலக்கட்டங்களில்
உங்கள் ராசியை விட்டு விலகி பாத சனியாக அமர்ந்து பலன் தரப் போகிறார்.

உங்களின் பிரபல யோகாதிபதியான சனி பகவான் 2-ம் வீட்டிற்கு வந்தமர்வதால்
பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரச்சினை விலகும். அழகு, ஆரோக்யம் கூடும்.
எப்போதும் சோகம் படர்ந்த உங்கள் முகம் இனி பிரகாசிக்கும்.
குடும்பத்திலும் மகிழ்ச்சி தங்கும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று
சேருவீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்த கசப்புணர்வுகள் நீங்கும்.
மற்றவர்களின் மனநிலையை உணரத் தொடங்குவீர்கள். என்றாலும் பாதசனியாக
வருவதால் பேச்சில் கடுமை காட்டாதீர்கள். நீங்கள் சாதாரணமாகப் பேசப் போய்
பிரச்சினையில் முடிய வாய்ப்பிருக்கிறது.

குடும்பத்திலும் அவ்வப்போது சச்சரவு வரும். முன்கோபத்தைத்
தவிர்க்கப்பாருங்கள். பார்வைக் கோளாறு, காது, கண், பல் வலி வந்து போகும்.
காலில் சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும்-. உறவினர், நண்பர்களுடன்
நெருடல்கள் வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட
வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய சூழல் உருவாகும். அரசு
காரியங்கள் தாமதமாகி முடியும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். சனி
பகவான் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் வேலைச்சுமை இருக்கும். 8-ம் வீட்டைப்
பார்ப்பதால் எதிர்பாராத செலவுகள், சிறுசிறு விபத்துகள், ஒருவித படபடப்பு,
பயம் வந்து நீங்கும்.

நகை, பணத்தை யாருக்கும் கடன் தரவோ, வாங்கவோ வேண்டாம். லாப வீட்டைப்
பார்ப்பதால் நினைத்தது நிறைவேறும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.
மூத்த சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.
வியாபாரத்தில் நட்டங்கள், இழப்புகள், ஏமாற்றங்கள் நீங்கும். திடீர் லாபம்
உண்டு. வேலையாட்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. புது
தொடர்புகள் கிடைக்கும். புது இடத்திற்குக் கடையை மாற்றுவீர்கள்.
கட்டுமானம், ஸ்டேஷனரி, கடல் வாழ் உயிரினங்களால் ஆதாயமடைவீர்கள்.
பங்குதாரர்கள் ஆதரிப்பார்கள். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

இந்த சனி மாற்றம் தடைகளை தகர்த்தெறிவதுடன் உங்களுக்குப் பணவரவையும்,
மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.

விருச்சிகம்


மனசாட்சி சொல்வதை மறுக்காமல் செய்பவர்களே! இதுவரை உங்களின் ராசிக்குப்
பனிரெண்டில் அமர்ந்துகொண்டு ஏகப்பட்ட தொந்தரவுகளைத் தந்த சனி பகவான்
இப்பொழுது 2.11.2014 முதல் 25.10.2017 வரை உள்ள காலகட்டங்களில்
ராசிக்குள்ளேயே ஜன்ம சனியாக அமர்கிறார். ஜென்ம சனி என்ன செய்யப் போகிறதோ
என்றெல்லாம் அஞ்சாதீர்கள். சனி பகவான் உங்களுக்குத்
திருதியாதிபதியாகவும், சுகாதிபதியாகவும் வருவதால் ஒரளவு நல்லதையே
செய்வார். எடுத்த வேலைகளையெல்லாம் இனி முதல் முயற்சியிலேயே
முடிப்பீர்கள்.

வீரியத்தைவிட காரியம்தான் முக்கியம் என்பதை இனி உணருவீர்கள்.
கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தைத் திருப்பித் தருவீர்கள்.
குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். சந்தேகத்தால்
பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். ஆனால் ராசிக்குள் சனி
அமர்ந்து ஜென்ம சனியாக வருவதால் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம்
செலுத்தப்பாருங்கள். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலி, செரிமானக் கோளாறு,
தலைசுற்றல், இரத்த அழுத்தம் வந்து போகும்.

பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமையும் வரும். மெடிக்ளைம் எடுத்துக்
கொள்ளுங்கள். கொழுப்புச் சத்துள்ள உணவுகள் வேண்டாம். இரத்தத்தில்
சர்க்கரையின் அளவைச் சரி பார்த்துக்கொள்ளுங்கள். உடல் பருமனாவதைத்
தவிர்க்க தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. தோலில் நமைச்சல்,
அலர்ஜி, யூரினரி இன்பெக் ஷன் வரக்கூடும். சில நேரங்களில் எங்கே நிம்மதி
என்று தேட வேண்டி வரும். தன்னைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார்,
அல்லாதவர்கள் யார் என்பதைக் கண்டறிவதில் குழப்பம் வந்து போகும்.

இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம்,
ஈகோ பிரச்சினையைத் தவிர்க்கப்பாருங்கள். உறவினர், நண்பர்களிடம் இடைவெளி
விட்டுப் பழகுவது நல்லது. வி.ஐ.பிகளின் நட்பால் சில காரியங்களைச்
சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். சொத்து வரி,
வருமான வரி எதுவாக இருந்தாலும் தாமதிக்காமல் செலுத்துவது நல்லது. சனி
பகவான் மூன்றாம் வீட்டைப் பார்ப்பதால் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.
அவ்வப்போது வரும் தோல்வி மனப்பான்மையைத் தவிர்க்கப்பாருங்கள். வீடு, மனை
வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்து போகும்.

7-ம் வீட்டைப் பார்ப்பதால் மனைவிக்கு முதுகு, மூட்டு, கழுத்து வலி வந்து
போகும். சனி பகவான் 10-ம் வீட்டைப் பார்ப்பதால் உத்தியோகத்தில்
வேலைச்சுமை இருக்கும். உத்தி யோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை
பார்க்க வேண்டிவரும். பணிகளைச் சற்றுப் போராடி முடிக்க வேண்டிவரும். சக
ஊழியர்களுடன் பனிப்போர் வந்து நீங்கும். சலுகைகளும், சம்பள உயர்வும்
தாமதமாகும்.

இந்த சனி மாற்றம் ஒருவித மனப் போராட்டங்களுக்கிடையே மகிழ்ச்சியையும்,
வெற்றியையும் தருவதாக இருக்கும்.

தனுசு


தன் சொந்த முயற்சியால் முன்னேறுபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு லாப
வீட்டில் அமர்ந்து உங்களுக்குப் பணவரவை தந்து, உங்களை முன்னேற்றப்
பாதைக்கு அழைத்துச் சென்ற சனி பகவான் இப்போது 2.11.2014 முதல் 25.10.2017
வரை உள்ள காலக்கட்டங்களில் விரயச் சனியாகவும், ஏழரைச் சனியின்
தொடக்கமாகவும் இருப்பதால் எதிலும் கொஞ்சம் நிதானத்தைக் கடைபிடிப்பது
நல்லது.

சனி பகவான் உங்களுக்கு 2-ம் வீடு மற்றும் 3-ம் வீட்டதிபதியாக வருவதால்
ஏழரைச் சனியால் ஏற்படும் கெடுபலன்கள் குறையும். ராசிக்கு 12-ல் சனி
மறைவதால் உங்களுடைய பலம் பலவீனத்தை உணர்ந்து செயல்படப்பாருங்கள். சிலர்
உங்களைத் தவறான பாதைக்கு வழி காட்டக் கூடும். யாரையும் எளிதில் நம்பி
ஏமாறாதீர்கள். நீண்ட நெடுங்காலமாகத் தள்ளிப் போன வேலைகளையெல்லாம்
மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். ஆனால் கொஞ்சம்
சிக்கனமாக இருக்கப்பாருங்கள். இதுவரை உங்கள் ராசி மீது வீழ்ந்த சனியின்
பார்வை இனி விலகுவதால் உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும்.
கணவன்-மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். அன்யோன்யம் அதிகரிக்கும்.
சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களையெல்லாம் நீங்களே செலவு செய்து
முன்னின்று நடத்துவீர்கள். ஆன்மிகவாதிகள், மகான்கள், சித்தர்களின் ஆசி
கிட்டும்.

நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டிற்குக் குடிபுகுவீர்கள்.
அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வெளிவட்டாரத்தில் நீங்கள்
பெருமையாகப் பேசப்படுவீர்கள். புது டிசைனில் நகை வாங்குவீர்கள்.
எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். உங்கள் குடும்ப விஷயங்களில்
மற்றவர்களைத் தலையிட அனுமதிக்காதீர்கள். மனைவியைப் பிள்ளைகள்
முன்னிலையில் குறைக்கூற வேண்டாம். சில விஷயங்களில் திட்டமிட்டது
ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். முக்கியக் காரியங்களை நீங்களே
நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது.

இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். யாரையும் யாருக்கும்
பரிந்துரை செய்ய வேண்டாம். பழைய கடன் பிரச்சினையால் சேர்த்து வைத்த
கௌரவத்திற்கு பங்கம் வந்துவிடுமோ என்ற அச்சம் வந்து போகும். வாகனம்
அடிக்கடி செலவு வைக்கும். சனி பகவான் 2-ம் வீட்டைப் பார்ப்பதால்
ஒருபக்கம் பணவரவு உண்டு என்றாலும் மற்றொரு பக்கம் செலவினங்களும் இருந்து
கொண்டேயிருக்கம். குடும்பத்தினருடன் இணக்கமாக செல்லவும். யாரையும்
எடுத்தெறிந்து பேச வேண்டாம்.

வீண் செலவுகள், தந்தைக்கு ஆரோக்யக் குறைவு, அவருடன் மனத்தாங்கல் வந்து
நீங்கும். வியாபாரத்தில் மக்கள் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். சந்தை
நிலவரம் அறிந்து முதலீடு செய்யப்பாருங்கள். உத்தியோகத்தில்
எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். உயரதிகாரிகளிடம் அளவாகப்
பழகுங்கள். சக ஊழியர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும்.

இந்த சனி மாற்றம் உங்களுக்கு ஏழரைச் சனியின் தொடக்கமாக இருந்தாலும் ஓரளவு
நிம்மதியையும், எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்து தருவதாகவும் அமையும்.

மகரம்


புதுமையைப் புகுத்துபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில்
அமர்ந்துகொண்டு உங்களை ஒரு வேலையையும் முழுமையாகப் பார்க்க விடாமல்
தடுத்ததுடன், உத்யோகத்தில் மரியாதைக் குறைவான சம்பவங்களையும் தந்த உங்கள்
ராசிநாதன் சனி பகவான் இப்போது 2.11.2014 முதல் 25.10.2017 வரை உள்ள
காலகட்டங்களில் லாப வீட்டில் அமர்வதால் இனி தொட்ட காரியங்கள் துலங்கும்.
மற்றவர்களால் முடியாத செயற்கரிய காரியங்களையும் சுலபமாக முடித்துக்
காட்டுவீர்கள். திடீர் பணவரவு, யோகம் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான
சூழல் உருவாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். கணவன் -
மனைவிக்குள் பாசப்பிணைப்பு அதிகரிக்கும்.

வீட்டில் தள்ளிப்போன சுப காரியங்கள் கூடி வரும். குழந்தை பாக்கியம்
உண்டாகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து இனி சேமிக்கத் தொடங்குவீர்கள்.
சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சிலர்
பூர்வீக சொத்தை உங்கள் ரசனைக்கேற்ப விரிவுபடுத்துவீர்கள். மகளின்
திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்தபடி
உயர்கல்வி, உத்தியோகம் அமையும். பழைய கடன் பிரச்சினைகள்
கட்டுப்பாட்டிற்குள் வரும். மனைவி வழியில் அந்தஸ்து உயரும். பழுதான
மின்னணு, மின்சாரச் சாதனங்களை மாற்றிப் புதுசு வாங்குவீர்கள். இயக்கம்,
சங்கம் இவற்றில் கௌரவப் பதவிகள் தேடி வரும். வழக்கில் வெற்றி
பெறுவீர்கள்.

ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு.
உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு இனி தடையின்றிக் கிடைக்கும்.
நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் புதுத் தொழில் தொடங்குவீர்கள். சனி
பகவான் ராசியைப் பார்ப்பதால் தலைசுற்றல், லேசாக மயக்கம், டென்ஷன், அலர்ஜி
வந்து நீங்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும்.
பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். குலதெய்வப்
பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

சனி பகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் அயல்நாட்டுப் பயணம் சாதகமாக
அமையும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை சாமார்த்தியமாக
விற்றுத் தீர்ப்பீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனங்களுடன் புது
ஒப்பந்தங்கள் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். ரியல்
எஸ்டேட், பதிப்பகம், சிமெண்ட் வகைகளால் லாபம் அடைவீர்கள். உத்யோகத்தில்
உங்களின் நிர்வாகத் திறமை கூடும். உங்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்த சக
ஊழியர்கள் இனி மதிப்பார்கள். மூத்த அதிகாரிகள் முக்கியத்துவம்
அளிப்பார்கள்.

இந்த சனி மாற்றம் செல்வம், செல்வாக்குள்ள அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கும்.

கும்பம்


ரசிப்புத் தன்மை அதிகம் கொண்டவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம்
வீட்டில் அமர்ந்து சேமிப்புகளைக் கரைத்துக் கொண்டிருந்த சனி பகவான்
இப்போது 2.11.2014 முதல் 25.10.2017 வரை உள்ள காலகட்டங்களில் 10-ம்
வீட்டில் அமர்வதால் புதிய பாதை தென்படும். திடீர் யோகம் உண்டாகும்.
உங்களுடைய திறமைகளையும், அறிவாற்றலையும் வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள்
கிடைக்கும்.

ஆளுமைத் திறனும் அதிகரிக்கும். தந்தையார் குணமடைவார். அவருடன்
இருந்துவந்த மோதல்கள் விலகும். வருமானம் உயரும். குடும்பத்தினருடன்
கலந்தாலோசித்து, பழைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். பிதுர்வழி
சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
தந்தைவழி உறவினர்களுடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் விலகும்.
கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் தீரும். மழலை பாக்கியம் உண்டு.
மகளுக்கு நல்ல வரன் அமையும். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலையறிந்து
பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். மனைவிவழி
உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். வீட்டில் கூடுதல் தளம்
அமைப்பது அல்லது கூடுதல் அறை கட்டுவது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில்
முடியும்.

சொந்த ஊர் பொதுக் காரியங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள்.
சகோதரங்களால் உதவிகள் உண்டு. ஓதுங்கியிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசத்
தொடங்குவார்கள். அவசரத்திற்குக் கைமாற்றாக, கடனாக வாங்கியிருந்த பணத்தை
தந்து முடிப்பீர்கள். ஆலயங்களைப் புதுப்பிக்க உதவுவீர்கள். அரசு
காரியங்கள் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சனி பகவான்
4-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாருக்கு நெஞ்சு வலி, இரத்த அழுத்தம்,
இடுப்பு வலி வந்து போகும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள்
வாங்குவீர்கள். மனைவியுடன் வாக்குவாதம், அவருக்கு ஃபைப்ராய்டு, தைராய்டு
பிரச்சினைகள் வரக்கூடும். ஆனால் வி.ஐ.பி.களின் அறிமுகம் கிடைக்கும்.

சனி பகவான் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் தூக்கமின்மை, சுப விரயங்கள்
ஏற்படும். ஆன்மிகப் பயணம் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் கடினமாக
உழைத்து லாபம் பெறுவீர்கள். தள்ளிப்போன ஒப்பந்தங்கள் தேடி வரும்.
உத்யோகத்தில் உயர்வு உண்டு. அநாவசிய விடுப்புகளைத் தவிர்க்கவும்.
முக்கியப் பதவி, பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சக
ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். திடீர் இடமாற்றம் உண்டு.

இந்த சனி மாற்றம் உங்கள் ஆழ்மனதில் இருந்த திறமைகளை வெளிக் கொணர்வதுடன்
ஓரளவு வசதியையும் தருவதாக அமையும்.

மீனம்


சரித்திரத்தில் இடம்பிடிக்க விரும்புபவர்களே! இதுவரை அஷ்டமத்தில்
நின்றுகொண்டு உங்களைப் படாதபாடு படுத்தி, விரக்தியில் மூழ்க வைத்த சனி
பகவான் இப்போது 2.11.2014 முதல் 25.10.2017 வரை உள்ள கால கட்டங்களில்
9-ம் வீட்டில் அமர்வதால் இருள் சூழ்ந்த உங்கள் வாழ்க்கை இனி பிரகாசிக்கத்
தொடங்கும். சாதிக்க வேண்டுமென்ற தன்னம்பிக்கை உண்டாகும். தோல்வி
மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். தொலைநோக்குச் சிந்தனை
அதிகரிக்கும். பழைய பிரச்சினைகள், சிக்கல்களிலிருந்து விடுபடுவீர்கள்.

புது வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்.
கணவன்-மனைவிக்குள் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். இனி இருவரும் மனம்
விட்டுப் பேசி முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். பிள்ளைகள் உங்கள்
அருமையைப் புரிந்துகொள்வார்கள். மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும்.
மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கண்டும்
காணாமல் சென்று கொண்டிருந்தவர்களெல்லாம் வலிய வந்து நட்பு
பாராட்டுவார்கள்.

தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். அங்கு, இங்கு
புரட்டி ஏதாவது ஒரு வீடோ, மனையோ வாங்கிவிட வேண்டுமென்று முயற்சி
செய்தீர்களே! நல்ல விதத்தில் முடியும். வெளிவட்டாரம், சொந்த ஊரில் இழந்த
செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல
தீர்ப்பு வரும். பங்காளிப் பிரச்சினை தீரும். ஆனால் தந்தையாருடன் மன
வருத்தம் வரும். தந்தையாருக்குச் சிறுசிறு அறுவை சிகிச்சை, மூச்சுப்
பிடிப்பு, எலும்புத் தேய்மானம் வந்து போகும். பிதுர்வழி சொத்தைப்
பெறுவதில் தடைகள் ஏற்படும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறையும்
நீடிக்கும்.

சனி பகவான் 3-ம் வீட்டைப் பார்ப்பதால் புது முயற்சிகள் பலிதமாகும்.
அரசால் அனுகூலம் உண்டு. வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும்.
சனி பகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள்.
என்றாலும் பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். வழக்கில்
தீர்ப்பு சற்று தாமதமாகும். சனி பகவான் லாப வீட்டைப் பார்ப்பதால்
தடைகளெல்லாம் நீங்கும். புதுப் பொறுப்புகளும், வாய்ப்புகளும் தேடி வரும்.
பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.
இழப்புகளைச் சரி செய்வீர்கள். `

அனுபவமிக்க வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். விலகிச் சென்ற
பங்குதாரர் மீண்டும் வருவார். தேங்கிக் கிடந்த பணிகளை சக ஊழியர்களின்
ஒத்துழைப்பால் விரைந்து முடிப்பீர்கள். அதிகாரிகளின் பலம் எது பலவீனம்
எது என்பதை உணர்ந்து அதற்கேற்ப உங்களின் நடவடிக்கைகளை
மாற்றிக்கொள்வீர்கள். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு தாமதமின்றி
இனி கிடைக்கும். வேறு நல்ல வாய்ப்புகளும் வரும்.

இந்த சனி மாற்றம் மங்கியிருந்த உங்களைப் பளிச்சிட வைத்து, பணவரவையும் தரும்.

நன்றி -இந்து